மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்ற பால்குட பவனி நேற்று வெள்ளிக்கிழமை (15) வெகு விமர்சையாக நடைபெற்றது.
வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 11 ஆம் திகதி தொடங்கியது. சர்வதேச இந்துமத குருபீடாதிபதியும், சபரிமலை குருமுதல்வருமான மஹாராஜா ராஜகுரு கிரியா கலாபமணி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் இவ்வுற்சவம் நடைபெற்று வருகிறது.
பால்குட பவனிகொம்மாதுறை விநாயகர் ஆலயத்திலிருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்ற பால்குட பவனி, மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆலயம் வரை நடைபெற்றது.
ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் மற்றும் விசேட பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. இந்நிகழ்வில் பெருமளவான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.