ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் திங்களன்று நாட்டின் ஆயுதப் படைகளுக்கு 2026 முதல் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், தொடர்புடைய உபகரணங்களை வாங்குவதைத் தடை செய்யும் ஆணையில் கையெழுத்திட்டார்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ரஷ்ய ஆயுதப் படைகளுக்கான அனைத்து சீருடைகள் ,பிற ஆடைப் பொருட்களையும், நாட்டிற்குள் உற்பத்தி வசதிகளைக் கொண்ட ரஷ்ய நிறுவனங்களே தயாரிக்க வேண்டும்.2027 ஆம் ஆண்டளவில், இந்தத் தேவை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் துணிகள் ,பின்னலாடைப் பொருட்களுக்கும் நீட்டிக்கப்படும், அவை உள்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும்.
இராணுவத்தின் தேவைகளுக்காக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் மற்றும் பொருட்களை வாங்குவதை முற்றிலுமாக விலக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று ஆணையில் கூறப்பட்டுள்ளது.
இராணுவ உடைகள் , உபகரணங்களில் சீருடைகள், சின்னங்கள், உள்ளாடைகள், படுக்கை, சிறப்பு ஆடைகள், காலணிகள், உபகரணங்கள், சுகாதாரப் பொருட்கள் ஆகியவை அடங்கும். இத்தகைய பொருட்கள் ரஷ்ய அரசு பாதுகாப்பு உத்தரவு அமைப்பு மூலம் வாங்கப்படுகின்றன.
Trending
- அரசவங்கி ஊழியர்களின் ஒன்றினைந்த தொழிற்சங்கம் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
- சமூக செயற்பாட்டாளர் கேரள கஞ்சாவுடன் கைது
- 62ஆயிரம் இளைஞர்கள் அரச சேவையில் இணைப்பு
- நேபாளத்திலுள்ள 97 மலைச் சிகரங்களில் இலவசமாக ஏறும் வாய்ப்பு
- எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது : வலுசக்தி அமைச்சர்
- மீகொட துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பலி
- பிரியந்த வீரசூரியவை ஐஜிபியாக அங்கீகரித்தது அரசியலமைப்பு சபை
- அமைச்சர் அருணா ஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிப்பு