புதிய நீதியரசராக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன இன்று (27) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றார். நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன இலங்கையின் 49வது நீதியரசாரவர்.
முன்னாள் நீத்யரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட காலியிடத்திற்கு நீதிபதி சூரசேனவின் பெயர் சமீபத்தில் அரசியலமைப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
1989 ஆம் ஆண்டு வழக்கறிஞர் சங்கத்திற்கு அழைக்கப்பட்ட . பிரீத்தி பத்மன் சூரசேன, பின்னர் சட்டமா அதிபர் துறையில் இணைந்து, அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார். 2007 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2016 ஆம் ஆண்டில், அவர் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார், 2018 இல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகவும், 2019 இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
அப்போதிருந்து, பிரீத்தி பத்மன் சூரசேன உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார், இதன் மூலம் முன்னாள் தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோவுக்குப் பிறகு மிகவும் மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் உருவெடுத்துள்ளார்.