போதைப்பொருள் கடத்தல் அதனுடன் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்ட 3,283 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜூலை 11 ஆம் திகதி தொடங்கிய ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது,நாடு முழுவதும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைத் தடுப்பதில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.
ஒரு வார கால நடவடிக்கையில், 3,286 சோதனைகளை நடத்தி, 2,464 போதைப்பொருள் மாத்திரைகள், 784 சட்டவிரோத சிகரெட்டுகள் , 5,923 கஞ்சா செடிகளை பொலிஸார் கைப்பற்றினர்.
கூடுதலாக, 1 கிலோ, 733 கிராம், ,174 மி.கி ஹெராயின், , 19 கிராம், 615 மி.கி ஹஷிஷ் உள்ளிட்ட பெரிய அளவிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், இதன் மூலம் 1,147 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
2 கிலோ, 375 கிராம், ,756 மி.கி மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) மீட்கப்பட்டதாகவும், அதன் மூலம் அதை வைத்திருந்து விநியோகித்ததாக 1,129 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.