உலகின் வயதான மரதன் ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையைப் பெற்ற ஃபவுஜா சிங், தனது 114 வயதில் வீதி விபத்தில் காலமானார்.
ஜலந்தர் – பதான்கோட் நெடுஞ்சாலையில் கார் மீது மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.
114 வயதிலும், அவர் தனது வலிமை ,அர்ப்பணிப்பால் இளம் தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். 2024 டிசம்பரில் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள அவரது கிராமமான பியாஸிலிருந்து இரண்டு நாள் ‘நாஷா முக்த் – ரங்லா பஞ்சாப்’ அணிவகுப்பின் போது அவருடன் நடந்து செல்லும் பெருமை எனக்குக் கிடைத்தது” என்று அவர் தெரிவித்தார்.
1911ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று ஜலந்தரில் உள்ள பியாஸ் கிராமத்தில் பிறந்தவர் ஃபவுஜா சிங். அவருக்கு வயது ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. அவரது மகன் குல்தீப் மற்றும் அவரது மனைவியின் மரணம், அவரை வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தை நோக்கி செல்ல தூண்டியது. 89 வயதில், அவர் ஓட்டப் பந்தயத்தில் தீவிரமாக ஈடுபட்டார். வெளிநாட்டில் வசிக்கும் அவரது பிள்ளைகள் இந்தியா திரும்பிய பிறகே அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.