கிளிநொச்சியில் கடந்த 11 ஆம்திகதி இலங்கை கடற்படை நடத்திய சோதனையில் கடத்தப்பட்ட மசாலாப் பொருட்கள், மருந்துகள் அழகுசாதனப் பொருட்கள் ஆகியன கைப்பற்றப் பட்டன.
நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.பொருட்களை கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வட மத்திய கடற்படை கட்டளையின் SLNS புவனேகா நடத்திய இந்த நடவடிக்கையில், 300 கிலோ ஏலக்காய், 260 கிலோ மஞ்சள் தூள், 273 கிலோ உலர்ந்த இஞ்சி உட்பட பல கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
எரக்கண்டி, கல்முனைகுடி, திருகோணமலை, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்ய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கட்டுநாயக்கவில் உள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.