ஹைதராபாத்தில் இருந்து கடந்த மாதம் இலண்டனுக்குச் சென்ற விமானத்தில் எஞ்ஜின்களுக்கு எரிபொருள் துண்டிக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் என முதல் கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) அறிக்கையின்படி, போயிங் 787 ட்ரீம்லைனரின் காக்பிட்டில் எரிபொருளைக் கட்டுப்படுத்தும் சுவிட்சுகள் “CUTOFF” நிலைக்கு நகர்த்தப்பட்டன.
“எஞ்சின் 1 , எஞ்சின் 2 எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள் RUN இலிருந்து CUTOFF நிலைக்கு ஒன்றன் பின் ஒன்றாக ஒரு வினாடி நேர இடைவெளியுடன் மாறின.
“என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், என்ஜின் N 1 , N2 அவற்றின் புறப்படும் மதிப்புகளிலிருந்து குறையத் தொடங்கின.”
அப்போது விமானி அறையில் குழப்பம் ஏற்பட்டது. குரல் பதிவில், ஒரு விமானி மற்றவரிடம் ஏன் “துண்டித்தார்” என்று கேட்பது கேட்கிறது. மற்றொரு விமானி தான் அவ்வாறு செய்யவில்லை என்று பதிலளிக்கிறார்.
15 பக்க அறிக்கையில் விமானத்தின் கப்டன் எந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார், முதல் அதிகாரி என்ன கருத்துகளைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடப்படவில்லை. விமானிகளில் ஒருவர் விபத்துக்கு சற்று முன்பு “மேடே, மேடே, மேடே” என்றார்.
விபத்து நடந்து 30 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், விசாரணையின் ஆரம்ப கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு AAIB அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்வதாகவும் அது தெரிவித்துள்ளது. ஒரு வருடத்திற்குள் இறுதி அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
- காசா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல், மீண்டும் போர் பதற்றம்!
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்