இந்தியாவின் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஓகஸ்ட் நடுப்பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கிறிக்கெற் தொடர் ஒன்றை நடத்துவதற்கான கலந்துரையாடல் நடைபெறுகிறது.
ஜூலை ஓகஸ்டில் நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) ஒத்திவைப்பு, இலங்கைக்கான சாதகத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் செய்யப்படவில்லை என்றாலும், இரு நாடுகளும் ஒரு குறுகிய இருதரப்பு தொடரின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன – ஒருவேளை மூன்று ஒருநாள் ,மூன்றுரிடி20 போட்டிகளைக் கொண்டதாக இருக்கலாம்.
இந்த ஆண்டு இந்தியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய முதலில் திட்டமிடப்படவில்லை,பங்களாதேஷுடன் விளையாடத் திட்டமிடப்பட்டது. அது இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கை ஓகஸ்ட் மாத இறுதியில் ஸிம்பாப்வேக்கு புறப்பட உள்ளது, அங்கு தொடர் ஓகஸ்ட் 29 ஆம் திகதி தொடங்குகிறது. இதன் விளைவாக ஓகஸ்ட் நடுப்பகுதி மட்டுமே இந்தியாவை நடத்துவதற்கு சாத்தியமான காலமாகும்.
Trending
- ட்ரம்பின் ஆசைப்படி இடிக்கப்படும் வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி
- யாழ். போதனா வைத்தியசாலை படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
- ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி
- அமெரிக்கர்களின் உயிரை பறிக்க வந்த கப்பல் – குண்டுவீசி தகர்த்த அமெரிக்கா
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை