கதிர்காம திருவிழாவினை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வச்சந்நிதியிலிருந்து சிறப்பு பஸ் சேவை இம்மாதம் 25 ஆம் திகதி நடைபெறும்.காலை 10 மணிக்கு வேல் தாங்கிய வண்ணம் தரிசன யாத்திரை ஆரம்பமாகும்.
பிரதான வீதியோரமாக உள்ள பிரசித்தி பெற்ற தலங்களை தரிசித்த வண்ணம் பஜனை வழிபாடுகளுடன் கதிர்காமத்தை திருவிழா தொடங்கும் நாளில் சென்றடைந்து
அங்கே மாணிக்கங்கையில் வேல் சகிதம் அடியார்கள் நீராடி, கதிர்காம ஆலயத்தில் கொடி ஏற்ற உற்சவம் கண்டு ஏழுமலை ஏறி முருக வழிபாடுகளை நிறைவு செய்து கொண்டு 27. ஆம் திகதி அதிகாலை மீண்டும் செல்வச்சந்நிதி ஆலயம் நோக்கி பஸ் புறப்படும். பஸ் கட்டணம் மட்டும் அறவிடப்படும் உணவு, தங்குமிட் வசதி இலவசமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.