இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி விஜேரத்னவை ஜூன் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ல , டாக்டர் விஜேரத்னவும் மேலும் இருவரும் தனது தனியார் மருத்துவ நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு அதிக விலைக்கு சில மருந்துகளை விற்றதாகவும், அதே நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அந்த மருந்துகளை வாங்க வேண்டுமென்றே தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தால் நோயாளிகளுக்கு ரூ.3 கோடி நிதி இழப்பு ஏற்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கூறியது.
இந்தப் பிரச்சனையை துமிந்த சில்வா மூடி மறைத்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவால் ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டது.