அகமதாபாதில் நடந்த மிகப்பெரிய விமான விபத்தின் கோர காட்சிகளே இன்னும் மக்களின் மனதை விட்டு நீங்காமல் இருக்க, மற்றொரு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறங்கியது.
தாய்லாந்து ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை அவசரமாக தரையிறங்கக் கோரியதாக ஃபூகெட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
விமானம் AI 379 தரையிறங்கியதாகவும், விமான நிலையம் அவசரகால செயல்முறைகளை தொடக்கியுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
அவசரகால ப்ரோடோகால் படி, பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக தாய்லாந்து விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதற்கட்ட தேடலுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் எந்த வித வெடிகுண்டு இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.
விமானத்தில் 156 பயணிகள் இருந்தனர் என்றும் விமானத்தின் உள்ளிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9:30 மணிக்கு (0230) ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டது. ஆனால் அந்தமான் கடலைச் சுற்றி வந்து பின்னர் மீண்டும் தாய் தீவில் தரையிறங்கியதாக விமான கண்காணிப்பாளர் Flightradar24 தெரிவித்துள்ளது.
Trending
- இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் 60 பேர் பலி
- உலக டெஸ்ட் சம்பியன் வரலாற்றுச் சாதனை படைத்தது தென் ஆப்ரிக்கா
- இலங்கையில் துருக்கிய கடற்படைக் கப்பல்
- சிறைச்சாலை ஆணையாளர்களின் சொத்துக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
- சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சந்தித்தது ஜேவிபி தூதுக்குழு
- 8,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டது.
- காங்கேசன்துறை பொலிஸுக்கு மிரட்டல்
- எச்சரிக்கின்றனர் குழந்தை மருத்துவர்கள்