மாத்தறை பொல்ஹேன கடற்கரைக்கு வருகை தரும் உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வாகன தரிப்பு கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பொல்ஹேனா கடற்கரையுடன் இணைக்கப்பட்ட நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை, உள்ளூர் ,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கான கட்டண வசூலை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற முறையில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, குழுவின் தொடர்புடைய அதிகாரிகள் , பொலிஸார் ஆகியோருக்கு இது தொடர்பாக அறிவுறுத்தியுள்ளார்.