காஸாவை விலைக்கு வாங்கி அமெரிக்காவுக்கு சொந்தமாக்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். அங்குள்ள பலஸ்தீனியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இதற்கு பலஸ்தீன, காஸா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் காஸா பகுதியில் இருந்து 10 லட்சம் பலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியா நாட்டுக்கு மாற்றும் திட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது.மேலும் பலஸ்தீனியர்களை மீள்குடியேற்றுவதற்கு ஈடாக, ட்ரம்ப் நிர்வாகம் லிபியாவிற்கு கோடிக்கணக்கான டொலர் நிதியை அளிக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், பலஸ்தீனியர்களை லிபியா நாட்டுக்கு மாற்றும் திட்டம் குறித்து வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனக்கூறி அமெரிக்க அதிகாரி ஒருவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.