கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியிலிருந்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்கள் ஊடாக இழப்பீட்டுத் தொகை சம்பத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 10 இலட்சம் வழங்கப்படும் என்றும், நிதி அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிதி திஸ்ஸமஹாராம, லுணுகம்வெஹெர, வெலிமட, ஹல்துமுல்ல, எல்ல, குண்டசாலை, பமுனகொட்டுவ, பண்டுவஸ்நுவர மேற்கு, பொல்பிதிகம, வனாத்தவில்லுவ, சிலாபம், புத்தல, தனமல்வில, வெல்லவாய, கந்தளே மற்றும் ரம்பேவ ஆகிய பிரதேச செயலகங்கள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ் விபத்தில் உயிரிழந்தவர்களில் 22 பேர் இப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆகும்.