யாழ்ப்பாண பாதுகாப்பு கட்டளை தலைமை யகத்தின் எற்பாட்டில் பெளர்ணமி வெசாக் தினம் 12 ஆம் திகதி ஸ்ரீ நாக விகாரையில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் YABM ஜகம்பத் தலைமையில் நடைபெற்றது
வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். பெளத்த சிந்தனை பிரித்பாராயண அனுஷ்டனங்களைவிகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ நிகழ்த்தினர்.
இதனை தொடர்ந்து வெளிச்சகூடு, அலங்காரப்பந்தல் ஆகியவற்றுக்கான மின் ஒளிகதிர்களை நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அரம்பித்து வைத்தார். தமிழ்,பெளத்த பக்திபாடல்கள் இசைக்கப்பட்டன.
யாழ்ப்பாண பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோக னன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன்,இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Trending
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!
- “ஜென்ம நட்சத்திரம்” திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு!
- ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது.
- இளையராஜாவிற்கு பதிலடி கொடுத்த வனிதா!
- எக்ஸ்-பிரஸ் பேர்ல் சுற்றுச்சூழல் பேரழிவை ஜனாதிபதி விசாரிக்க வேண்டும்