128 ஆண்டுகளுக்குப் பிறகு, கிறிக்கெற் ஒலிம்பிக் அரங்கிற்கு மீண்டும் வரவேற்கப்பட உள்ளது.
2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில், கிறிக்கெற் அதிகாரப்பூர்வமாக T20 வடிவத்தில் சேர்க்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் , பெண்கள் பிரிவுகளில் தலா ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் மொத்தம் 90 வீரர்கள் பங்கேற்பார்கள் என ஐ.ஓ.சி. அறிவித்துள்ளது.
1900-ஆம் ஆண்டு பரிஸ் ஒலிம்பிக்கில் — இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிக்கெற்றுடன் சேர்ந்து, ஸ்குவாஷ், ஃபிளாக் கால்பந்து, பேஸ்பால்/சாப்ட்பால் மற்றும் லாக்ரோஸ் ஆகியவையும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் புதிய விளையாட்டுகளாக இணைக்கப்பட்டுள்ளன.
2028 ஒலிம்பிக்கில் மொத்தமாக 351 பதக்கப் போட்டிகள் இடம்பெறவுள்ளன – இது பரிஸ் 2024 ஒலிம்பிக்கில் உள்ள 329 போட்டிகளைவிட அதிகம். 10,500 தடகள ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விளையாட்டுகளுக்காக மேலும் 698 வீரர்கள் இடம் பெறுவர்.
2022 காமன்வெல்த் விளையாட்டுகளில், பெண்கள் T20 கிறிக்கெற் முதல் முறையாக இடம்பெற்றது.அப்போ அவுஸ்திரேலியா தங்கம், இந்தியா வெள்ளி பதக்கங்களை வென்றன.
2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டுகளிலும் ஆண்கள் ,பெண்கள் கிரிக்கெட் இடம்பெற்று, இந்தியா இரண்டிலும் தங்கம் வென்றது.