Monday, April 27, 2026 9:32 pm
அமெரிக்கா,இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் மேற்கொள்ளப்படும் தொடர் ராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில், மாஸ்கோவின் ஆதரவைக் கோரும் விதமாக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்தித்தார்.
ஓமானிலிருந்து வந்தடைந்த அராக்சியிடம் “முடிந்தவரை விரைவில் அமைதியை அடைவதற்காக, உங்கள் நலன்களுக்கும், பிராந்திய மக்கள் அனைவரின் நலன்களுக்கும் சேவை செய்யும் அனைத்தையும் செய்ய ரஷ்யா தயாராக உள்ளது” என்று புட்டின் கூறினார்.
வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், கிரெம்ளின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் மற்றும் ரஷ்யாவின் ஜி.ஆர்.யு இராணுவ உளவுத்துறை அமைப்பின் தலைவர் இகோர் கோஸ்ட்யுகோவ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

