Monday, April 27, 2026 9:47 pm
வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கோல் ஆலன் , திங்கட்கிழமை முதல் முறையாக கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜராகிறார் . அவர் மீது ஆரம்பத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்றும், விசாரணை தொடரும்போது மேலும் பல குற்றச்சாட்டுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
வாஷிங்டன் ஹில்டனில் நடைபெற்ற வருடாந்திர விழாவில் சுமார் 2,500 அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் ,பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தபோது, துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் ஜனாதிபதி ட்ரம்ப் மேடையிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டார் . 1981 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் சுடப்பட்ட அதே ஹோட்டல்தான் இந்த ஹில்டன்.
ஞாயிற்றுக்கிழமை “60 மினிட்ஸ்” நிகழ்ச்சியில் ட்ரம்ப் பேசுகையில் , தாம் “கவலைப்படவில்லை ” என்றும், “நாம் ஒரு குழப்பமான உலகில் வாழ்கிறோம்” என்றும் கூறினார். வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், பிற்பகல் 1 மணிக்கு பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளிப்பதாகக் கூறினார். பிரிட்டன் மன்னர் சார்லஸ் , ராணி கமிலா ஆகியோர் அமெரிக்காவிற்கான நான்கு நாள் பயணத்திற்காக இன்று பிற்பகல் வாஷிங்டன் வந்தடைய உள்ளனர்.

