Friday, May 1, 2026 8:47 pm
ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ‘எடிசலாட்’ பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு துறையிலிருந்து வெளியேற பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் டெலிகம்யூனிகேஷன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் தனக்குள்ள பங்குகளை விற்பனை செய்வது ,சந்தையிலிருந்து வெளியேறுவது குறித்து அந்த நிறுவனம் தற்போது ஆய்வு செய்து வருகிறது.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழல் , பிராந்திய மோதல்களுக்கு மத்தியில், வளைகுடா முதலீட்டாளர்களின் புதிய உத்தி மாற்றமாக இது பார்க்கப்படுகிறது.
இந்த வெளியேற்ற முடிவிற்கு உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் ,மத்திய கிழக்கு ,தெற்காசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.
பாகிஸ்தான் அரசு 62 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. எடிசலாட் நிறுவனம் 26 சதவீத பங்குகளை வைத்திருந்தாலும், அந்த நிறுவனத்தின் மேலாண்மை கட்டுப்பாட்டை தன்வசம் வைத்துள்ளது.
எடிசலாட், பாகிஸ்தான் அரசு ஆகியவற்றுக்க் இடையே 2005-ஆம் ஆண்டிலிருந்து நீண்டகால நிதி தகராறு நிலவி வருகிறது. 2005-ல் 26 சதவீத பங்குகளை 2.6 பில்லியன் டொலருக்கு ஏலம் எடுத்த எடிசலாட், அதில் 1.8 பில்லியன் டொலரை செலுத்தியது.
ஆனால், சில சொத்துக்களை தன் பெயருக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு தவறியதால், மீதமுள்ள 800 மில்லியன் டொலரை அந்த நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. தற்போது இந்த வெளியேற்றத் திட்டம் ஆரம்பகட்ட மதிப்பாய்வில் உள்ளதால், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

