Friday, May 1, 2026 2:00 pm
அரசாங்க நிறுவனங்களில் தற்காலிக, மாற்று ஒப்பந்த அல்லது சலுகை அடிப்படையில் தற்போது பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான சுற்றறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
பொதுத்துறை ஊழியர்களின் நீண்டகால வேலைவாய்ப்பு ஸ்திரத்தன்மை மற்றும் அவர்களின் நிலை குறித்த கவலைகளுக்கு இந்த நடவடிக்கை தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதி வாய்ந்த ஊழியர்களின் பணி நிலைமைகளை முறைப்படுத்துவதையும், பொதுத்துறையில் அதிக வேலை பாதுகாப்பை உறுதி செய்வதையும் இந்த சுற்றறிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சேவைக் காலம், செயற்திறன் மதிப்பீடுகள் மற்றும் அந்தந்த நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

