Monday, June 8, 2026 11:53 am
சொல்லிசைப் பாடகர் சங்கீர்த்தனை விடுதலை செய்யக்கோரி இன்றைய தினம் வல்வெட்டிதுறையில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரதேச இளைஞர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ், பொது அமைப்பு பிரதிநிதிகள், சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

