Monday, May 4, 2026 11:35 am
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ‘INS SINDHUKESARI’ செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையானது கடற்படை மரபுகளின்படி நீர்மூழ்கிக் கப்பலை வரவேற்றது.
கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ள இந்தியக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் ‘INS SINDHUKESARI’ தீவில் தங்கியிருக்கும் காலத்தில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நீர்மூழ்கிக் கப்பலின் குழுவினர் பங்கேற்பதுடன், இலங்கையில் உள்ள பல முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல உள்ளனர்.

