Friday, April 17, 2026 4:02 pm
வலுச்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சுயாதீனமாகவும், நீதியாகவும் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தாம் பதவி விலகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றின் ஊடாக இந்த விடயத்தை அறிவித்து எரிசக்தி அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் பதவி விலகியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இன்று விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

