Thursday, March 5, 2026 1:09 pm
ஏப்ரல் மாதம் இறுதி வரை இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல், இலங்கையின் எரிபொருள் இறக்குமதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருண தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா துறைமுகத்திலிருந்து 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் நேற்று இரவு புறப்பட்ட நிலையில், எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி குறித்த கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் சவால்கள் நிலவினாலும் இலங்கைக்கு மசகு எண்ணெயைத் தடையின்றி கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களில் எவ்வித இடையூறுமின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான முழுமையான கொள்ளளவு மற்றும் வசதிகள் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாக தலைவர் உறுதியளித்துள்ளார்.

