Thursday, February 5, 2026 2:37 pm
இலங்கையில் தேசியப் பாடசாலைகளின் ஆசிரியர்களும், கல்விசாரா ஊழியர்களும் இன்று (05) ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டம் நடத்தினர்.
தேசிய பள்ளிகளில் மூன்று ஆண்டுகள் சேவையை முடித்த ள் தங்கள் குழந்தைகளை தாம் கடமையாற்றும் படசாலைகளில் சேர்க்க அனுமதிக்கும் சலுகை 2025 முதல் எந்த சரியான காரணமும் இல்லாமல் இரத்து செய்யப்பட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய , கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகளுடன் சந்திப்புகள் நடத்தப்பட்ட போதிலும், எந்த தீர்வும் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

