Tuesday, January 20, 2026 10:30 am
யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய அன்னலிங்கம் அஜந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி உயிரிழந்தவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை இரத்த வாந்தி எடுத்துள்ளார். காலை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
அவர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

