Saturday, December 20, 2025 2:47 pm
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு , நாகர்கோவில் மேற்கு மயானத்திற்குச் செல்ல சீரான வீதியின்மையால் இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதில் நாகர்கோவில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இன்று சனிக்கிழமை (20) அமரத்துவமடைந்த ஒருவரது தகனக்கிரியைகளை மேற்கொள்வதற்கு சுமார் இரண்டடி மழை வெள்ளத்தைக் கடந்து சென்று எரிகொட்டகை எதுவுமின்றி வெறும் நிலத்தில் வைத்து சடலம் தகனம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக உரியவர்கள் கவனமெடுத்து மயானத்திற்கான வீதி மற்றும் கொட்டகை ஆகியவற்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

