Wednesday, December 17, 2025 10:24 am
அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மேலும் 6 நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சேர்த்துள்ளார்.
இதன்படி பாலஸ்தீனம், சிரியா, பர்கினா பாசோ, மாலி, நைஜர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னர் பகுதித் தடை விதிக்கப்பட்ட லாஸ், சியோரா லியோன் ஆகிய பகுதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
“வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்” மற்றும் ஏனைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை கையெழுத்திடப்பட்ட புதிய பிரகடனத்தின் மூலம் முழுமையான அல்லது பகுதியளவு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் 39 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

