Friday, December 12, 2025 4:39 pm
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 பொது தகவல் தொழில்நுட்பத் பரீட்சையை (GIT) ஜனவரி 11, 2026 அன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த பரீட்சார்த்திகள் தங்கள் தேர்வு மையத்தில் தேர்வுக்கு வர முடியாவிட்டால், அவர்கள் தங்கள் பாடசாலையின் அதிபருக்குத் தெரிவிக்க வேண்டுமெனவும் அதேபோல், சம்பந்தப்பட்ட அதிபர்கள் தங்கள் பாடசாலையில் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் குறித்து அறிவிக்க வேண்டும் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர்கள் தமது பாடசாலைப் பரீட்சார்த்திகள் இடர் நிலைமைக்குட்பட்டிருப்பின் அது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர், பரீட்சை ஆணையாளர் (பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு, பெறுபேறு) ஆகியோருக்கு அறிவித்தல் வேண்டும் என பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

