Friday, December 12, 2025 2:52 pm
இன்று வெள்ளிக்கிழமை (12) கிளிநொச்சியில் உலக மண் தின நிகழ்வும் அறுவடை சஞ்சிகை வெளியீடும் கண்காட்சியும் நடைபெற்றுள்ளது .
குறித்த இவ் நிகழ்வை வடக்கு மாகாண விவசாய அமைச்சு , கிளிநொச்சி மாவட்ட செயலகம் இணைந்து வடமாகாண விவசாய கமநல சேவைகள் , கால்நடை அபிவிருத்தி , நீர்ப்பாசன மீன்பிடி நீர் வளங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஏற்பாட்டில் நிகழ்த்தியது.
யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் ஏற்பாடு செய்த கண்காட்சியும் இன்று பகல் 9:30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா ஜீவஸ்ரீ தலைமையில் நடைபெற்றுள்ளது .
இந் நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் , கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அமைச்சின் செயலாளர் துறை சார் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
இக் கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கங்களாக மண் வளத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துதல், மண் சிதைவு , மண் அரிப்பு போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை காணப்படுகின்றது.

