Tuesday, December 9, 2025 11:15 am
நாட்டில் நிலவிய அனர்த்தத்தினால் மூடப்பட்ட அரச பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான நடைமுறை தொடர்பான சுற்றறிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (09) வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார்.
குறித்த சுற்றறிக்கையானது கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவினால் வெளியிடப்பட்டுள்ளது.
பாடசாலைகள் 16 ஆம் திகதி மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாகாண மட்டத்தில் பாடசாலைகள் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நாலக கலுவேவா மேலும் தெரிவித்துள்ளார்.

