Friday, December 5, 2025 11:05 am
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள கண்டல் காடு பகுதியில் 36 கை குண்டுகள் வெளிவந்துள்ளன.
இக் கைக்குண்டுகளை நேற்று வியாழக்கிழமை (04) விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மாவிலாறு குளம் உடைப்பையடுத்து கிண்ணியா பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் தற்போது வெள்ள நீர் வழிந்தோடியதை அடுத்து அந்த பகுதியை துப்பரவு செய்யும் போது இந்தக் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இதனை பார்வையிட்ட பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.
இதையடுத்து விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவு வரவழைக்கப்பட்டு , 36 கை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் நீதிமன்ற உத்தரவை பெற்று இதனை செயலிழக்க வைப்பதற்காக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

