Thursday, December 4, 2025 1:59 pm
நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலினால் 275000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப் புயலினால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து மிகுந்த கவலையடைவதாக யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிகாம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சிறுவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை யுனிசெப் நிறுவனம் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள சிறுவர்களுக்காக கல்விப் பொதிகளை வழங்க யுனிசெப் நிறுவனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

