Tuesday, December 2, 2025 4:22 pm
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக 2025 உயர்தரப் பரீட்சை மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் தகவல் தொடர்பு சிரமங்கள் போன்ற இடர்ப்பாடுகளினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.சுபாசினி இந்திக்கா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இது தொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை.
இதன்படி , நடைபெறாதிருக்கும் மீதமுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

