Monday, November 24, 2025 2:54 pm
தொல்பொருள் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தின் கோறளைப்பற்று பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியோர் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
கோறளைப்பற்று பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் “தொல்பொருள் இடம்” என்ற பெயர்ப் பலகைகளை தொல்பொருள் திணைக்களத்தினர் நாட்டியுள்ளனர். இதனை அகற்றும் பணி பிரதேச சபை தவிசாளர் உட்பட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் இன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
சட்டம் அனைவருக்கும் சமம். சட்டத்தை கையிலெடுத்து இந்த செயற்பாட்டில் ஈடுபட்டோர் மீது நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கு, கிழக்கிற்கும் தெற்கிற்கும் ஒரே சட்டம் தான். அதனை எவரும் மீறக்கூடாது. இதுதொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

