எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட ஹர்த்தால் போராட்டத்திற்கான திகதி மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் இருப்பை கண்டித்தும், முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தும் இலங்கை தமிழரசு கட்சியினால் ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
15 ஆம் திகதி மன்னார் மடு திருத்தல திருநாள் என்பதனாலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறும் வழிபாடுகளைக் கருத்தில் கொண்டும் எதிர்வரும் 18 ஆம் திகதி ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.