நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் நகைகளை திருடுவதற்கு பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
ஆலய சூழலில் திருடர்களின் நடமாட்டம் காணப்படுவதால் ஆலயத்திற்கு தங்க நகைகளை அணிந்து வருவதை தவிர்க்குமாறும் தாம் அணிந்துள்ள தங்க நகைகளில் கவனம் செலுத்துமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அருகில் உள்ளவர்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்தால் ஆலய வளாகத்தில் பொலிஸ் சீருடை மற்றும் சிவில் உடைகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாருக்கு உடன் அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.