கழிப்பறைக்குள் நீண்ட நேரம் அமர்ந்து கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதால் மூலநோய் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிக நேரம் கழிப்பறையில் அமர்ந்து இருக்கும் போது, குதப்பகுதியில் (rectal area) உள்ள இரத்த நாளங்கள் வீங்கி அழுத்தம் அதிகரிக்கிறது.
மேலும் மலச்சிக்கல் மற்றும் பிற செரிமானப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இப்பழக்கத்தைத் தொடர்ந்தால் ஆசனவாய் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு இரத்த நாளங்கள் வீங்கி மூலநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.