ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயாராக உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
ரஷ்ய நீர்நிலைகளுக்கு அருகில் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவின் மிகவும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் கூறினார்.
அச்சுறுத்தல் விளையாட்டு வேண்டாம் என மெட்வெடேவ் எச்சரிக்கை
ட்ரம்பின் கருத்திற்கு பதிலளித்த மெட்வெடேவ், ரஷ்யாவின் நேர்மையை வலியுறுத்தி, டிரம்ப் அச்சுறுத்தல் விளையாட்டை விளையாட வேண்டாம் என்று எச்சரித்தார்.
இதுபோன்ற அச்சுறுத்தல்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே போருக்கு வழிவகுக்கும் என்று மெட்வெடேவ் தெரிவித்தார்