இந்தியாவின் மகாராஷ்டிராவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்காகத் ஆரம்பிக்கப்பட்ட “லட்கி பஹின் யோஜனா” திட்டத்தில் பாரிய மோசடியொன்று பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், ஆண்டுக்கு இந்திய ரூபாய் 2.5 இலட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் 1,500 இந்திய ரூபாயினை வழங்குகின்றது.
இந்தநிலையில் 14,298 ஆண்கள் போலியாகப் பதிவு செய்து, 21.44 கோடி இந்திய ரூபாய் உதவித் தொகையைப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து குறித்த பணம் வசூலிக்கப்படும் என மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Trending
- தாய்லாந்தும், கம்போடியாவும் “நிபந்தனையற்ற” போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன
- மகளிர் கிண்ண உலக செஸ் சம்பியனானார் திவ்யா
- பாங்கொங்கில் உணவுச் சந்தையில் துப்பாக்கிச் சேடு 6 பேர் பலி
- கப்டனாக அறிமுக டெஸ்ட் தொடரில் 4 சதங்கள் சதங்கள் ஷுப்மன் கில் சாதனை
- துல்கர் சல்மான் பிறந்தநாளில் சிறப்பு போஸ்டர் வெளியிட்ட காந்தா படக்குழு
- Govpay செயலி மூலம் அபராதம் செலுத்தும் முறை அமுல்
- ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்
- பெண்களாக மாறி மோசடியில் ஈடுபட்ட 14,000 ஆண்கள்