அசாம் மாநிலத்தில் விவாகரத்து பெற்ற ஆண் ஒருவர் பாலில் குளித்து, கொண்டாடும் வீடியோ வைரலான அதே சமயத்தில், கேரளாவில் விவாகரத்து பெற்ற பெண்கள், குழுவாக சேர்ந்து சுற்றுலா சென்று விவாகரத்தை கொண்டாடி உள்ளனர்.
கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ரபியா அபி, விவாகரத்து பெற்ற பெண்களுக்கான குழு ஒன்றை உருவாக்கி, சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். மாநிலம் முழுவதிலும் இருந்து பல இளம்பெண்கள், இதற்கு சம்மதம் தெரிவித்து சுற்றுலாவில் பங்கு பெற்றனர்.
அவர்கள் ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். தங்களுக்கு விவாகரத்தான காரணம் பற்றி மற்ற பெண் தோழிகளிடம் பகிர்ந்து கொண்டனர்.
விவாகரத்தான பெண்களுக்கு வேடிக்கை பயணமாகவும் மற்றும் புதிய நம்பிக்கை, உறவுகளை உருவாக்கும் பயணமாகவும் இது அமைந்ததாக அவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அவர்கள் கொண்டாடும் வீடியோ வலைத்தளவாசிகளை வெகுவாக கவர்ந்தது.
Trending
- ரசிய எரிவாயு ஆலை மீது உக்ரெயன், ரோட்ன் தாக்குதல்
- தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- மகளிர் உலகக் கோப்பையில் இங்கிலாந்து அபார பந்து வீச்சு
- இன்று தீபத் திருநாள்
- சாவகச்சேரி பெண் ஏமாற்றப்பட்டாரா? விசாரணைகளில் தகவல் வெளியானது
- காசா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல், மீண்டும் போர் ஆரம்பம்!
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு. ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!