முக்கொம்பனில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் பெறுமதியான மரக்குற்றிகளை வட்டா ரக வாகனத்தில் கடத்தி வந்த ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்று காலை சங்குப்பிட்டி பகுதியில் வைத்து 2 இலட்சம் பெறுமதியான 45 பாலைமரக்குற்றிகளும் கைப்பற்றப்பட்டது.
விசுவமடு பகுதியை சேர்ந்த 28 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கைது செய்யப்படும் போது சாரதியையும் வாகனத்தையும் விடுதலை செய்வதற்கு 3 இலட்சம் ரூபா வரை பேரம் பேசப்பட்டதாகவும்பொலிஸார் தெரிவிக்கின்றனர்.