Last Updated on Thursday, June 5, 2025 8:55 am
அரசாங்க மருந்தாளர் சங்கம் மேற்கொண்டுள்ள ஒருநாள் பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் சிகிச்சை பெற முடியாது பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
பதவி உயர்வு தொடர்பான பிரச்சனை அனைவருக்கும் நியாயமாக தீர்க்கப்படவில்லை.
செயல்திறன் தடை தொடர்பாக சுகாதார அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட மேலாண்மைப் பயிற்சியை நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கத் தவறியமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று மாதார்ந்த சிகிச்சை தினம் என்பதால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் சிகிச்சை பெற்றும் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாமல் பல அசெளகரியங்களை எதிர்நோக்கிய நிலை காணப்பட்டுள்ளது.