“அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்” வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாயும் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மோசடியால் கட்டமைக்கப்பட்ட கறுப்புப் பொருளாதாரம் அகற்றப்படும்.
பொது நிதியைப் பாதுகாக்க ஒரு சட்ட மற்றும் பொறுப்புணர்வு அமைப்பு நிறுவப்படும்.
இன்று ஆரம்பிக்கப்பட்ட தேசிய வரி வாரம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறும்.
இந்த வாரத்தில் வரி செலுத்துதல் தொடர்பாக பொதுமக்களுக்கு புரிதலையும், விழிப்புணர்வையும் வழங்க எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தனது செலவினங்களைக் கூட இன்றளவு குறைத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
வரிப் பணம் முழுமையாகப் பாதுகாக்கப்படும்.
யாராவது அதைத் தவறாகப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
“அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” ஒவ்வொரு ரூபாயையும் பாதுகாப்போம்” .- என்றார்.