உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாதவர்களுக்கு தபால் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
தமக்கு கடிதங்கள் கிடைக்கப்பெறும் தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதி செய்வதன் மூலம் அதைப் பெறலாம் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் மே 6 ஆம் திகதி மாலை 4.00 மணி வரை இந்த வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.