Wednesday, April 30, 2025 5:05 am
நாளைய தினம் தொழிலாளர் தினம் மற்றும் மே தின பேரணிகளை முன்னிட்டு, இலங்கை பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை அறிவித்துள்ளது.
இலங்கை முழுவதும் அரசியல் கட்சிகளால் திட்டமிடப்பட்டுள்ள ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பின் பல பகுதிகளிலும் தலவாக்கலையிலும் அரசியல் பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

