இந்தியாவின் பஹல்காமில் பல சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்மை தொடர்பான தாக்குதலுக்கு வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நீடித்த தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்தார்.
மேலும் இந்திய மக்களுடன் இலங்கையின் அசைக்க முடியாத ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
உலகில் எங்கு பயங்கரவாதம் நடந்தாலும், அதை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலங்கை அரசாங்கத்தின் மற்றும் மக்களின் இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.
தற்போதைய பதட்டங்கள் விரைவில் தணியும் என்றும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை விரைவாக மீட்டெடுக்கப்படும் என்றும் இலங்கை நம்புவதாக ஜனாதிபதி திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.