2025 ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் அறிவித்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவை முன்னிட்டு, இவ்வாறு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 26 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு (உள்ளூர் நேரம்) புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து அரசு நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது.