முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) வாக்குமூலம் அளிக்க ஆஜராகியுள்ளார்.
அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதே விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க மைத்திரிபால சிறிசேன முன்னதாக ஏப்ரல் 07 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறைக்கு ஆஜரானார்.