கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் வாகனத்தின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளது.
இச் சம்பவம் நேற்று (18) பிற்பகல் 5:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்டு, கிளிநொச்சி மாவட்டப் பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்ரமணியம், உடற்கூறு ஆய்வின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.